பலதும் பத்தும்

மார்பகக் கப்பை காட்டும் விருதுக்கு கடும் எதிர்ப்பு

131 ஆவது தரும பாடசாலை தேசிய தினத்தை முன்னிட்டு கெப்ப​த்திகொல்லேவ மகா வித்தியாலயத்தில் 02 ஆம் திகதி நடத்தப்பட்ட தர்மபோதனை பாடசாலை நாடகப் போட்டியும் தேசிய விழாவின் நோக்கமும் மிகவும் பாராட்டத்தக்கது என்றாலும், அங்கு வழங்கப்பட்ட விருதுகளின் தோற்றம் காரணமாக பெற்றோர்கள் உட்படக் கூடியிருந்தவர்கள் மத்தியில் தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கலாச்சார மற்றும் மதப் பின்னணிக்குப் பொருத்தமற்ற வகையில் விருதுகளை வழங்குவது வெறும் தற்செயலான தவறா, அல்லது அரசாங்கத்தையும் ஆட்சி இயந்திரத்தையும் கேலிக்குள்ளாக்கும் நோக்கத்துடன் பொறுப்பற்ற தரப்பினரால் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட செயலா என்பது குறித்துப் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாடசாலை நாடகப் போட்டியொன்றில் அல்லது வேறு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படாத வகையிலான, மார்பகக் காப்பைக் காட்டும் வயலின் வாசிக்கும் உருவம் பொறிக்கப்பட்ட சிலை வடிவமைப்பு இந்தத் தரும பாடசாலை விருக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்துப் பெற்றோர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், பௌத்த விவகார ஆணையாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button