பலதும் பத்தும்

அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

இந்திய குடும்பங்களில் கற்பூரம் மிக முக்கியமான பொருளாகக் கருதப்படுகிறது பூஜையில் பயன்படுத்தப்படும் கற்பூரம் வீட்டின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், பல ஜோதிட பரிகாரங்கள் மற்றும் ஒருவரின் அதிர்ஷ்டத்தை மாற்றும் சக்தி வாய்ந்தது.

போபாலைச் சேர்ந்த ஜோதிடரும் வாஸ்து ஆலோசகருமான பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா கூறும் சில கற்பூர வாஸ்துவை தெரிந்து கொள்ளுங்கள்.

மன அமைதி வேண்டுமா?, பலருக்கும் வீட்டில் உள்ள கஷ்டத்தால் மன அமைதி பாதிக்கப்படும். இதனால் நீங்கள் எந்த நேரமும் பதட்டமான சூழ்நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு நேரம் சரியில்லை என்று நீங்கள் உணர்ந்தால், எப்போதும் ஒரு சிறிய கற்பூரத்தை உங்கள் பாக்கெட்டிலோ, பர்ஸிலோ வைத்து அதை இடது கையில் வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் பிரச்சனை விலகும்.

அழகு நிவர்த்தி, ஜோதிடத்தின் படி, கற்பூரம் சுக்கிரனைக் குறிக்கிறது. உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது உங்களை கவர்ச்சி குறைவாக இருந்தாலோ, அது பலவீனமான வீனஸின் அறிகுறியாகும். அதை வலுப்படுத்த கற்பூரத்தை பயன்படுத்த வேண்டாம் அதற்கு பதிலாக, கற்பூரத்தை ஒரு துணியில் சுத்தி, உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

காலசர்ப்பம், ராகு, பித்ரு தோஷம் நிவர்த்தி: பலரது ஜாதகத்தில் இது போன்று தோஷம் இருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உங்களுக்கும் இருந்தால், உங்கள் பணப்பை, அதாவது பர்ஸ், பாக்கெட்டில் கற்பூர பாக்கெட்டை சிறிய பருத்தி துணியால் கட்டி வைப்பது சிறந்தது. அதுவும் அது சிவப்பு துணியாக இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 7 நாட்களுக்கு ஒரு முறை இந்த கற்பூரத்தை மாற்ற வேண்டும். இதன் மூலம் உங்கள் தோஷங்கள் நீங்கி அமைதி நிலவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button