முச்சந்தி

“ஊடவியலாளர்களுக்கு வேறு தொழில் இல்லையா” என்று கோபத்துடன் திட்டிய முன்னாள் அமைச்சர் 

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இன்றைய தினம் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

நிதிக் குற்றம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காவே அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடவியலாளர் ஒருவர் “ஏன் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்தீர்கள்” என கேள்வி கேட்டார்.

அச் சந்தர்ப்பத்தில் ஊடவியலாளர்களுக்கு வேறு தொழில் இல்லையா என்று கோபத்துடன் திட்டியவாறு உள்ளே சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *