பலதும் பத்தும்

மரத்தால் செய்யப்பட்ட விலங்கு பொம்மைகள்; 20000 கி.மீற்றருக்கு விழிப்புணர்வு பயணம்!

மரத்தால் செய்யப்பட்ட மொம்மைகளைக் கொண்டு 20000 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு பயணம் நிறைவடைந்துள்ளது.

‘The Herds’ என்ற கலைக்குழுவினரால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்ட ஒரு விழிப்புணர்வு பயணம் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வுப் பயணம் காங்கோ – நோர்வே இடையே 20,000 கிலோமீற்றர் தூரத்துக்கு இடம்பெற்றுள்ளன.

‘The Herds’ என்ற கலைக்குழுவினரால் விலங்குகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மரத்தால் செய்யப்பட்ட விலங்கு பொம்மைகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

ஒட்டகச்சிவிங்கி, குரங்கு, யானை, மான், சிங்கம் உள்ளிட்ட பல விலங்குகள் மரத்தால் பொம்மை வடிவில் செய்யப்பட்டு விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பருவநிலை மாற்றத்தால் வேறு பகுதிகளுக்கு விலங்குகள் வெளியேறுவதை குறிப்பிடும் வகையில் இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் தொடங்கிய விலங்குகளின் விழிப்புணர்வு பயணம் தற்போது நிறைவடைந்துள்ளதாக விழிப்புணர்வு ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button