பலதும் பத்தும்

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு!

கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார்.

அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது.

இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

புளோரிடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிறைச்சாலையை மீண்டும் திறப்பது “எனக்கு இருந்த ஒரு யோசனை” என்றும், அதைச் செயல்படுத்த முடிவு செய்ததாகவும் கூறினார்.

“இது சட்டம் ஒழுங்கின் சின்னம்,” என்று அவர் கூறினார்.

தீவின் இருப்பிடம், குளிர்ந்த நீர் மற்றும் வலுவான நீரோட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அல்காட்ராஸ் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகக் கருதப்படுகிறது.

அல்காட்ராஸிலிருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சிறைச்சாலையில் இருந்து தப்பிய ஐந்து கைதிகள் காணாமல் போனதாகவும், நீரில் மூழ்கி இறந்ததாகவும் கருதப்படுகிறது.

Image

Image

Image

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button