லத்தீன் எழுத்து.. போப் பிரான்சிஸ் தெரிவித்த கடைசி ஆசை!

போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரின் இறுதி ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதிச்சடங்குகளுக்குப் பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
![]()