அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் ஏவுகணை சோதனை வெற்றி

அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தியக் கடற்படை, அரபிக்கடலில் உள்ள ஐஎன்எஸ் சூரத் (INS Surat) போர் கப்பலில் இருந்து நடுத்தர தூரம் கொண்ட வளிமண்டல ஏவுகணையை (MR-SAM) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை, கடல் மட்டத்திற்கருகே பறக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி மிகுந்த சீரான செயல்திறனைக் காட்டியது.
இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த MR-SAM ஏவுகணைத் தொழில்நுட்பம், விமானங்கள் மற்றும் மேற்பரப்பிலிருந்து தாக்கும் ஏவுகணைகளை எதிர்கொள்வதில் சிறந்தது.
குறிப்பாக, பாகிஸ்தான் கடற்படை திட்டமிட்டிருந்த ஏவுகணை சோதனைக்கு முன்னதாகவே இந்த சோதனை நடைபெற்றது.
INS Surat என்பது P15B வழிநடத்தும் ஏவுகணை நாசகார கப்பல் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதி கப்பலாகும். இது 75 சதவீதம் இந்திய உள்நாட்டு உற்பத்தி பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டான்சானியாவில் நடைபெற்ற AIKEYME கூட்டு இராணுவப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் INS Chennai மற்றும் INS Kesari கப்பல்கள் வெற்றிகரமாக பங்கேற்று, ஏப்ரல் 19-ஆம் திகதி தாரெஸ் சலாம் துறைமுகத்தைவிட்டு புறப்பட்டன.
இந்த பயிற்சியின் நிறைவுவிழாவில் டான்சானியா மக்கள் பாதுகாப்பு படையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலாசார நிகழ்ச்சிகளும், அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றன.
இந்த இரு நிகழ்வுகளும் இந்தியாவின் கடற்படைத்திறன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் உலகளாவிய இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியக் கட்டங்களாக பார்க்கப்படுகின்றன.
![]()