பலதும் பத்தும்

உலகளவில் விளைநிலங்களில் கன உலோக மாசு!

உலக அளவில் விவசாய நிலங்கள் ஆபத்தான கன உலோகங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கண்களுக்குப் புலப்படாவிட்டாலும், நம் உணவு ஆதாரத்தின் அடித்தளத்தில் ஒரு கவலை அளிக்கும் உண்மை மறைந்துள்ளது.

புதிய அறிவியல் ஆய்வின் படி, உலகளாவிய விவசாய நிலங்களில் சுமார் 17% ஆபத்தான கன உலோகங்களால் மாசுபட்டுள்ளது.

ஆர்சனிக், காட்மியம், மற்றும் ஈயம் போன்ற இந்த நச்சுப் பொருட்கள் அமைதியாக உணவுச் சங்கிலியில் நுழைந்து, நமது உணவுப் பாதுகாப்புக்கும், ஒட்டுமொத்த உடல் நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

கன உலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் இயற்கையாகவோ அல்லது மனித செயல்பாடுகளாலோ மண்ணில் சேர்கின்றன.

அவற்றின் அதிக அடர்த்தி மற்றும் அணு எடை காரணமாகவே இந்த பெயரை பெற்றுள்ளன.

கரிம மாசுகளை போலல்லாமல், இவை மண்ணில் பல தசாப்தங்களாக சிதையாமல் நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை.

இந்த காலகட்டத்தில், பயிர்கள் இந்த நச்சுக்களை உறிஞ்சி, நாம் உண்ணும் உணவில் கலந்துவிடுகின்றன.

சில கன உலோகங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம், குறைந்த அளவில் உடலுக்கு அவசியமான நுண்ணூட்டச்சத்துக்களாக இருந்தாலும், ஆர்சனிக், காட்மியம், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற மற்றவை மிகக் குறைந்த அளவிலும் நச்சுத்தன்மை கொண்டவை.

இந்த மாசுபடுத்திகள் இயற்கை புவியியல் மாற்றங்கள், சுரங்க நடவடிக்கைகள், தொழிற்சாலை கழிவுகள், சில வகை உரங்கள் மற்றும் மாசுபட்ட நீர்ப்பாசனம் போன்ற பல்வேறு வழிகளில் மண் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button