அணு ஆயுத போர் ஏற்பட்டால் உலகில் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்?
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இருவருக்கிடையேயான போர் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் கடந்துவிட்டன. சமீபத்தில் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இருவருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த போரில், ரஷ்யா முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பயன்படுத்தியது.
இந்த நீண்ட தூர ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் ரஷ்யாவிடம் இருந்து அணு ஆயுத தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் தற்போதைய கொந்தளிப்பின் மீது பதிந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? இது நடந்தால், உலகில் எந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்?
![]()