ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி – நாளை அறிவிப்பு: விசேட வர்த்தமானியும் வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது தேர்தலுக்கான திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டால், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் அல்லது 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *