முச்சந்தி
ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணிக்கு நாளை வருகிறது

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு நாளை(22) காலை 9மணிக்கு வருகைதரவுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தரணிகளால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கமைய
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் சில ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டில் இருக்கக்கூடிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் குழுவும் இதில் அடங்குவர் – என்றார்.
![]()