எல்லை மீறும் துப்பாக்கிச் சூடுகள்: புலிகள் மீது குற்றம் சுமத்தும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

யுத்தத்தின் பின்னரும் சமூகத்தில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உலாவருவதாலேயே இதனை இன்னும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நேற்றுமுன்தினம் மக்கள் என்ன சொன்னாலும் எதுவும் நடக்கவில்லை, என்ன செய்தாலும் எதுவும் நடக்காதது போல் பேசுகிறார்கள். நான் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், கிராமம் கிராமமாக நகரம் நகரமாக சென்று மக்களிடம் கேளுங்கள். பொதுமக்கள் முன்பு போல் போதைப்பொருளுக்கு அடிமையா என்று, அதன் பின்னர் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்காக இன்னும் கடுமையாகச் செயல்படுவோம்.

மேலும் அதுருகிரிய சம்பவத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்களில் பலரை கைது செய்துள்ளோம். இன்னும் இரண்டு பேர் இருக்கின்றனர் என நினைக்கிறேன்.

எம்பிலிப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் ரைடா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button