45 ஆண்டுகளாக சேவையாற்றும் ‘ட்ராபிக் ஆச்சி’
கேகாலை ஹெட்டிமுல்ல பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு முன்பாக 45 வருடங்களாக போக்குவரத்தை கையாண்டு வரும் மூதாட்டி ஒருவர் ஐந்தாம் தரப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
86 வயதுடைய பரகம்மன லில்லி வயலட் என்ற இந்த மூதாட்டியை அனைவரும் ‘ட்ராபிக் ஆச்சி’ என்று அன்புடன் அழைக்கின்றனர்.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தன் மகளை பாடசாலைக்கு அனுப்பிய பிறகு ஏற்பட்ட எண்ணத்தின் பலனாக இந்த சமூகப் பணியை அவர் தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் பயிலும் குழந்தைகள், சாலையை பாதுகாப்பாக கடக்கும் சமூக நடவடிக்கைக்காக காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இவர் சமுதாயத்தில் மிகவும் முன்மாதிரியான பாத்திரங்களில் ஒருவர். இதனால் அவர் ஐந்தாம் தரப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை நூற்றாண்டாக சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் குறித்த மூதாட்டி ஐந்தாம் தர சிங்கள வாசிப்புப் புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லில்லி வயலட் தனது 40 வருட சமூக சேவைக்காக 2017 ஆம் ஆண்டு கௌரவிக்கப்படுவார். அதே நேரத்தில், அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மனிதனுக்கு சேவை செய்வது மனிதனின் கடமை என்பதை சமுதாயத்திற்கு உணர்த்திய இந்த மூதாட்டியின் சேவை நாளை சமுதாயத்தில் நுழையும் எதிர்கால சந்ததியினருக்கு ஒளி விளக்கு எனலாம்.
![]()