உலகம்

இந்தோனேசியாவில் உணவு நஞ்சாதல் – 777 மாணவர்கள் பாதிப்பு

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில், அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்களாக 777 பேருக்கு உணவு நஞ்சூட்டல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர்  இந்த தகவலை வெளியிட்டார்.

இதன் மூலம், இந்தத் திட்டத்தால் நோய்வாய்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று நாட்களில் 1,700-ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய உணவு நஞ்சூட்டல் காரணமாக 950 இந்தோனேசியர்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ Prabowo Subianto  கடந்த ஆண்டு பல பில்லியன் டொலர் மதிப்பில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அதிக செலவு பிடிக்கும் இந்தத் திட்டம் ஊழல் குற்றச்சாட்டுகள், தலைமை மாற்றங்கள் மற்றும் மாணவர்கள் சுகவீனம் அடைதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button