இலங்கை

கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இன்று அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை என்பதால், இந்த மனுவை விசாரிக்கும் அதிகார வரம்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, இந்த மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை நிறைவு செய்தார்.

மேற்கொண்டு வாதங்கள்இம்மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button