உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்; 1000 பாடசாலைகளுக்கு பூட்டு

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்குக் கோடை வெயில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடங்கள் குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படாததால், ஏ.சி. வசதி இல்லாத வகுப்பறைகள் அனலாக மாறியுள்ளன. இதனால் வெப்பம் தாங்காமல் மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை; மயங்கி விழுந்த மாணவர்கள்.. 1000 பாடசாலைகளுக்கு பூட்டு | Severe Heatwave In Europe Uk 1 000 Schools Closed

 வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த  மாணவர்கள்

 

தற்போது திறந்திருக்கும் சில பாடசாலைகளில் மதிய உணவிற்குப் பதிலாக மாணவர்களுக்கு ஐஸ் கிரீம்கள் பழங்கள் மற்றும் மரக்கறிகளால் செய்யப்பட்ட செலட்டுகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து குளிர்வித்து வருகின்றனர்.

சில மாணவர்கள் வகுப்பறைக்குள் குளிர்ந்த நீர் வாளிக்குள் கால்களை வைத்துப் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தின் இந்த அவலநிலை, அந்நாடு இன்னும் பருவநிலை மாற்றத்திற்குத் இன்னும் தயாராகவில்லை என்பதையே காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button