இலங்கை

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை: ரகித ராஜபக்ச-தஹம் சிறிசேனவின் தொடர்பு!; திடுக்கிடும் தகவல்கள் கசிவு

தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் கொலையில் மேலும் பல பரபரப்பான தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.கைது செய்யப்பட்டுள்ள விஜேயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் சம்பந்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தினேஷ் ஷாப்டரின் வர்த்தக நடவடிக்கையானது திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதாகும்.அதாவது பிரஜெக்டுகளை (வர்த்தக நடவடிக்கைகள்) ஒரு பிணையாக வைத்துக் கொண்டு நிதியுதவி செய்வதாகும்.

ரகித ராஜபக்ச மற்றும் மைத்திரிபாலவின் மகன் தஹம் சிறிசேன ஆகியோர் ஒரு பிரஜெக்ட் பற்றிய தகவல்களை வழங்கி,முதலீட்டுக்காக பணம் கோரியுள்ளனர்.

இடைத்தரகரான பிரைன் தோமஸ்

இந்த பிரஜெக்ட் ரிப்போர்ட் (திட்ட அறிக்கை) விவகாரத்தில் இடைத்தரகராக கிரிக்கெட் வர்ணனையாளரான பிரையன் தோமஸ் செயற்பட்டுள்ளார். பிரையன் தோமஸ் இரண்டு பில்லியன் (200 கோடி) பிரஜெக்டை கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் இந்த பில்லியன் கணக்கான நிதியை விடுவிக்குமாறு இடையில் இருக்கும் பிரையன் தோமசே கோரிக்கை விடுக்கிறார். ஏனெனில் அதிலிருந்து பிரையன் தோமஸுக்கு ஒரு கமிஷன் பணம் கிடைக்கிறது.

இது ஒரு முக்கோண வடிவமான வர்த்தக நடவடிக்கையாகும்.அன்று தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவத்தில் பிரைன் தோமஸின் பெயர் பரவலாக பேசப்பட்டதாகும்.

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை: ரகித ராஜபக்ச-தஹம் சிறிசேனவின் தொடர்பு! திடுக்கிடும் தகவல்கள் கசிவு | Dinesh Schaffter Death Rakitha Rajapaksha

உண்மையில் ரகித ராஜபக்ச தான் பிரையன் தோமஸுக்கு இந்த இரண்டு பில்லியன் பிராஜெக்டை வழங்குகிறார். ரகித ராஜபக்ச இதனை வழங்கும் போது, அங்கு மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் இருக்கிறார்.

தஹம் சிறிசேன மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகிய இருவரும் இணைந்தே இதில் ஈடுபடுகின்றனர்.பிரையன் தோமஸ் சென்று இந்த ரிப்போர்ட்டைக் கொடுத்து குறித்த இரண்டு பில்லியனை விடுவிக்கிறார்.

அந்த பணம் குறித்த நிறுவனத்திற்குச் செல்கிறது. தினேஷ் ஷாப்டர் இந்த நிதியை விடுவித்துவிட்டு காத்திருக்கிறார்.

பணத்தை கேட்ட தினேஷ் சாப்டர்

ஏனெனில் இந்த நிதியை விடுவித்து, அந்த முதலீட்டிற்குரிய கமிஷனைப் பெறுவதே இவர்களின் பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் இலாபமாகும்.

அதாவது தினேஷ் ஷாப்டர், சந்திரா ஷாப்டர் மற்றும் பிள்ளைகள் என இந்த ஷாப்டர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பிரிந்து செல்கிறது.

இந்த நிதியைத் திருப்பிச் செலுத்துவது பற்றிப் தினேஷ் ஷாப்டர் பலமுறை பேச முற்பட்ட போது அது தவிர்க்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் இது குறித்துத் தேடியுள்ளார்.

இந்த இரண்டு பில்லியன் நிதி தினேஷ் ஷாப்டரின் மரணத்தை விரைவுபடுத்தியதா?தினேஷ் ஷாப்டர் இதற்காகப் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளின் தகவல்கள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) உள்ளன.

 

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை: ரகித ராஜபக்ச-தஹம் சிறிசேனவின் தொடர்பு! திடுக்கிடும் தகவல்கள் கசிவு | Dinesh Schaffter Death Rakitha Rajapaksha

தினேஷ் ஷாப்டரைக் கொலை செய்ய, பயன்படுத்திய தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொலைபேசி கோபுரங்களின் (Tower locations) தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக் கூடும்.

இன்னும் ஒரு சிறிய பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. அவற்றை ஆராய்ந்த பின்னர் உடனே, நீதிமன்ற உத்தரவுகளின்படி மருத்துவ அதிகாரிகளைக் கொண்டு உடலைத் தோண்டி எடுத்து விசாரணைகள் முன்னோக்கி நகரும் என நினைக்கிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button