உலகம்
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஈடுபாட்டைப் பரிந்துரைத்து நேபாளப் பிரதமர் பாலன் ஷா தெரிவித்த கருத்துக்கள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்விகள் குவிந்த நிலையில் இந்தியாவின் இந்த பதில் வந்துள்ளது.
இந்தியாவும் நேபாளமும் தங்களின் எல்லைப் பிரச்சினைகளின் அனைத்து அம்சங்களையும் கையாள்வதற்காக ஏற்கனவே இருதரப்பு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையின் பெரும்பகுதி தீர்க்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
![]()