உடல் சூட்டை அதிகரிக்கும் பேரீச்சம்பழம்… கோடையில் சாப்பிடக்கூடாதா?

பேரீச்சம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்றும் இதனை கோடை காலத்தில் சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தும் என் பலரும் இதனை ஒதுக்கும் நிலையில், இதன் உண்மை நிலையை தெரிந்து கொள்வோம்.
பேரீச்சம்பழம்
சத்துக்கள் அதிகம் கொண்ட பேரீச்சம் பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.
இரும்புச்சத்து அதிகம் கொண்ட பேரீச்சம்பழம் மருத்துவர்கள் நோயாளிகளை சாப்பிடக்கோரும் பழங்களில் முக்கியமாக பேரீச்சம் பழம் இருக்கின்றது.
பேரீச்சையில் இயற்கையான சர்க்கரை, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் இவைகள் காணப்படுவதுடன், இதனை கோடை காலத்தில் சாப்பிடலாம் என்று கூறப்படுகின்றது.
பலவீனத்தை போக்கவும், சோர்வு, மந்தநிலையினை போக்கவும், கோடை காலத்தில் இயற்கையான ஆற்றல் ஊக்கியமாக செயல்படுகின்றது.
கோடையில் நன்மை
இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்த உதவுகின்றது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம், இதயம் மற்றும் தசைகளுக்கு நன்மை அளிக்கின்றது.
இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.
ஆனால் இவற்றினை சரியான அளவில் உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தீமைகள் என்ன?
உடலை சூடாக்கும் தன்மை பேரீச்சம்பழத்தில் உள்ளதால், அதிகமாக சாப்பிட்டால் உடல் வெப்பநிலையினை அதிகரிக்கும். அதிகளவில் சாப்பிடுவது, அஜீரணம், நெஞ்செரிச்சல், நீரிழப்பு போன்ற பிரச்சனை ஏற்படுத்துகின்றது.
கடுமையான வெப்ப காலங்களில் அதிகளவில் பேரீச்சம்பழத்தினை சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தும் என மருததுவர்கள் கூறுகின்றனர்.

ஆதலால் கோடைகாலத்தில் பேரீச்சம் பழத்தினை 2 அல்லது 3 எடுத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் ஊறவைப்பது உடலைக் குளிர்வித்து செரிமானத்தை மேம்படுததுகின்றது.
![]()