பலதும் பத்தும்
கோடை காலத்தில் சியா விதைகள் தண்ணீரை குடித்தால் என்ன பயன்?

கோடை காலத்தில் சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது என்னவென்பதை பார்க்கலாம்.
சியா விதை தண்ணீர்
கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு சியா விதைகள் மிகவும் நன்மை தரும் என்று கூறப்பட்டுள்ளது.
சியா விதைகளில் ஒமேகா-3, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்திற்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
எனவே இதை எப்படி உட்கொள்ள வேண்டும் அதனால் என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.

ஊறவைத்த சியா விதைகளின் நன்மைகள்
உடல் குளிர்ச்சி
- சியா விதைகள் கோடைக்காலத்திற்கு ஒரு சிறந்த பொருள். இவை உடலைக் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதை தண்ணீரில் ஊறவைக்கும்போது இவை தண்ணீரை உறிஞ்சி, ஜெல்லி போன்ற பதத்திற்கு மாறுகின்றன. இது உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். கோடைகாலத்தில் இதை குடித்து வந்தால் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
செரிமான பிரச்சனைகள்
- நீங்கும் சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. சியா விதைகளை நீரில் ஊறவைக்கும்போது, அவை ஒரு ப்ரீபயாட்டிக்காகச் செயல்பட்டு செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு ஜெல்லி போன்ற பொருளை உருவாக்குகின்றன. கோடை காலத்தில், வயிற்று உப்புசம் மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு சியா விதை தண்ணீர் நிவாரணமளிக்கும்.

ஆற்றல்
- சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆற்றலின் சிறந்த ஆதாரங்களாகும். இதனால் கோடை காலத்தில் உடல் வெப்பத்தால் சோர்வடையாமல் இது பார்த்துக்கொள்ளும்.
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது
- சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதாக அறியப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) நிறைந்துள்ளது. இவற்றைத் தவறாமல் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

எடை குறைப்பு
- உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் சியா விதைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது, இது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, நீங்கள் நொறுக்குத் தீனி உண்பதைத் தடுக்க உதவுகிறது. இதனால் உடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
![]()