மத்திய கிழக்கு நாடுகளில் தலை மறைவாகியுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 7 பேர் சரணடைவதற்கு விருப்பம்

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தின் கீழ்,கொழும்பு மாவட்ட நடவடிக்கையில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்படுவதைத் தவிர்த்து, தற்போது மத்திய கிழக்கில் வசிக்கும் ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக, தங்களின் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்தின் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சியான “ஒரு தேசம் ஒன்றுபட்டது” கடந்த வாரம் தொடங்கப்பட்டது என்றும், நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த திட்டம் நடந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏராளமான நிறுவனங்களின் ஆதரவுடன் பல முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் தற்போது இருக்கும் ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெள்ளிக்கிழமை(7) இங்கு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் நடவடிக்கைகளை எங்கு மேற்கொள்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், தங்கள் பரிவர்த்தனைகளை முடித்துக்கொண்டு அதிகாரிகளிடம் சரணடையவும் ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
![]()