உலகம்

சீனாவின் நடவடிக்கைகளுக்கு இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்ட ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானத்தை அண்மித்த பகுதியில் சீன போர் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமைக்காக ஆஸ்திரேலியா, பெய்ஜிங்கிடம் இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தென் சீனக் கடலுக்கு மேல் பறக்கும் ஆஸ்திரேலிய இராணுவ விமானத்திற்கு மிக அருகில் சீன இராணுவ (PLA) Su-35 போர் விமானம் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் விமானத்தின் விமானிகள் காயமடையவில்லை என்ற போதும், இந்த சம்பவம் பாதுகாப்பற்றது மற்றும் தொழில்முறைக்கு புறம்பானது என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைக்கும் சீன இராணுவத்திற்கும் இடையே தொடர்ச்சியான முறுகலை ஏற்படுத்தும் தீவிரமான சம்பவம் இதுவென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சர்வதேச கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

தென் சீனக் கடலில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளை வெளியேற்ற சீனா முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *