பலதும் பத்தும்

சூட்கேஸில் ஆடை இன்றி இளம்பெண் சடலம்..

கடந்த மார்ச் மாதம் ஏற்காடு மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சூட்கேஸ் கொலை வழக்கு, தமிழ்நாடு ​பொலிஸின் அதிநுரைந்த விசாரணையால் வெளிப்பட்டது.

கத்தாரில் பழகிய ஐவர் நடராஜ் (32) மற்றும் அவரது உறவினர் கனிவளவன் ஆகியோர் சரண்டர் செய்ததன் மூலம், இந்த கொலை சம்பவம் முழுமையாக வெளியானது. சுமார் 600 கி.மீ. தூரம் உடலை ஏற்றிச் சுமந்து ஏற்காட்டில் வீசிய இந்தச் சம்பவம், ஒரு சாதாரண பச்சைக்குத்து சச்சரவிலிருந்து தொடங்கி பயங்கர கொலையாக முடிந்தது.

மார்ச் 1 அன்று அதிகாலை, ஏற்காடு மலைப்பாதையில் வனத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் ரோந்து நடத்திக் கொண்டிருந்தனர். 40 அடி உயரமுள்ள பாலம் அருகே திடீரென வீசிய துர்நாற்றத்தால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வனவிலங்கு இறந்திருக்கலாம் என நினைத்து விசாரித்தனர்.

ரோட்டோரம் 20 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தின் அடியில், செடிகள் சிதைந்த நிலையில் ஒரு நீல நிற சூட்கேஸ் கிடந்தது. ஈக்கள், எறும்புகள் திரண்டிருந்த அந்தச் சூட்கேஸைத் திறந்தபோது, அதில், அறைநிர்வாணமாக இறந்திருந்த ஒரு பெண்ணின் உடல். அவள் கருவுற்ற நிலையில், கைகள்-கால்கள் அடக்கி, தலை குனிந்த நிலையில் அழுகி சிதைந்திருந்தது.

அடையாளம் கூடத் தெரியாத அந்த உடலை விரைவாக மீட்ட பொலிஸ், சேலம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பியது. அட்டாப்சி அறிக்கையின்படி, பெண்ணின் வயது சுமார் 30. தலையில் பலமான அடித்ததால் உயிரிழந்திருக்கிறார் எனத் தெரிந்தது.

ஏற்காடு மற்றும் சுற்றுப்பகுதியில் பெண்கள் காணாமல் போன முறைப்பாடுகள் இல்லாததால், பொலிஸ் திணறியது. அப்போதுதான் சூட்கேஸில் ஒட்டியிருந்த பார்கோட் ஸ்டிக்கர் கிடைத்தது.

அதைச் சரிபார்த்தபோது, கோயம்புத்தூர் லூலு மாலில் வாங்கப்பட்ட சூட்கேஸ் எனத் தெரிந்தது. கடை நிர்வாகத்திடம் விசாரித்ததில், கடந்த மூன்று மாதங்களில் 12 பேர் அந்த மாடல் சூட்கேஸ் வாங்கியிருக்கிறார்கள் எனத் தெரிந்தது.

12 பேரின் தொடர்பு விபரங்களைப் பெற்ற பொலிஸ், அவர்களைத் தொடர்ந்து விசாரித்தது. 10 பேர் கோயம்புத்தூரிலேயே இருந்தனர். ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.

ஆனால், நடராஜ் என்பவர் தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லவில்லை. கடை சிசிடிவி ஃபுட்டேஜில் நடராஜ் சூட்கேஸ் வாங்கி வெளியேறுவது தெரிந்தது. அவரது கைப்பேசி சிக்னலைப் பின்தொடர்ந்த பொலிஸ், திருப்பத்தூர் மாவட்ட ஜோலர்பேட்டையில் அவர் மறைந்திருப்பதை அறிந்தது.

அதே நேரம், ஏற்காடு வட்டாட்சியர் (VAO) மோகன்ராஜிடம் நடராஜ் மற்றும் கனிவளவன் சரண்டர் செய்த தகவல் பொலிஸ் நிலையத்தை அடைந்தது. மார்ச் 24 அன்று அவர்களை கைது செய்த பொலிஸ், விசாரணையில் உண்மையை வெளிப்படுத்தினர்.

திருப்பத்தூர் பறவைக்கோட்டை இளைய நடராஜ், கத்தாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர். அங்கு கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிய சுபலட்சுமி (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

தேனி முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தாலும், கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, குழந்தைகளைத் தாயிடம் ஒப்படைத்து கத்தாருக்குச் சென்றிருந்தார்.

2023 ஜூன் மாதம் ரெண்டு பேரும் இந்தியா வந்தனர். சொந்த ஊர்களுக்குப் போய் தங்கிய பின், கத்தாருக்கு திரும்புவதற்கு பதிலாக கோயம்புத்தூர் பீலமேட்டில் வாடகை வீடு எடுத்து இணைந்து வாழத் தொடங்கினர். அங்கு வேலையும் தேடி, தம்பதியர் போல வாழ்ந்தனர்.

ஒரு நாள் தனிமையில், நடராஜின் நெஞ்சில் அவரது மனைவி ராஜேஸ்வரியின் பெயரைப் பச்சை குத்தியிருந்ததை சுபலட்சுமி பார்த்தார். “உன் வைஃப் பெயரை மட்டும் ஏன் குத்தியிருக்கிறாய்? என் பெயரையும் குத்து” எனக் கோரிய அவர், நடராஜ் கையில் தனது பெயரைக் குத்தினார்.

ஆனால், சில நாட்களுக்குப் பின் மனைவியைப் பார்க்கச் சென்றபோது, சுபலட்சுமியின் பெயரைக் குத்தியிருந்தது தெரிந்தால் பிரச்சினை என ஏங்கிய நடராஜ், அதை மீண்டும் அழித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பெப்ரவரி 27 அன்று கோயம்புத்தூருக்கு திரும்பியபோது, தனது பெயரைக் அழித்ததை அறிந்த சுபலட்சுமி கோபமடைந்தார். “என் பெயரை அழித்தது ஏன்? உன் வைஃப் பார்த்தால் பிரச்சினை என்றால், நான் உன் வைஃபுக்கு சொல்லி விடுகிறேன்” எனச் சண்டையிட்டார்.

“உன்னை விட்டு நான் போகமாட்டேன்” என ஆறுதல் சொன்ன நடராஜ், ஆனால் சச்சரவு தீவிரமடைந்தது.

“உன் வைஃப் பெயரை நான் பார்க்கக் கூடாது என்றால், என் பெயரையும் நீ அழித்திருக்கலாம்” என சுபலட்சுமி கிண்டலிட்டதும், கோபத்தில் நடராஜ் வீட்டில் இருந்த இரும்புக்கம்பியை எடுத்து அவர் தலையில் அடித்தார். நிலைகுலைந்து விழுந்த சுபலட்சுமி, ரத்தத்தில் கலந்து இறந்தார்.

பயந்த நடராஜ், உறவினர் கனிவளவனை அழைத்து சம்பவத்தைத் தெரிவித்தார். ரெண்டு பேரும் சேர்ந்து லூலு மாலில் சூட்கேஸ் வாங்கி, சுபலட்சுமியின் உடலை அதில் அடைத்தனர். சுயஓட்டும் காரை வாடகைக்கு எடுத்து, உடலை ஏற்றி அலைந்தனர். உடலை எங்கே வீசலாம் எனத் தேடியபோது, ஏற்காட்டில் டூர் போன ஞாபகம் வந்தது.

மார்ச் 1 இரவு, ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே காரை நிறுத்தி, விளக்குகளை அணைத்து சுற்றுப்பகுதியைப் பார்த்தனர். யாரும் இல்லை என உறுதிப்படுத்திய பின், சூட்கேஸை பள்ளத்தில் வீசி எறிந்து விரைவாக விலகினர். சுமார் 600 கி.மீ. தூரம் பொலிஸ் கண்ணிலிருந்து தப்பி, வெற்றி உணர்வுடன் வீடுகளுக்கு சென்றனர்.

ஒரு வாரம் வீட்டில் மறைந்த நடராஜ், பின்னர் கோயம்புத்தூருக்கு திரும்பி சுபலட்சுமியின் வீட்டில் தனியாக வாழ்ந்து, வேலைக்குப் போனதுபோல் நடித்தார். பின்னர் ஜோலர்பேட்டைக்குச் சென்றபோது பொலிஸ் விசாரணையை அறிந்து, கனிவளவனுடன் சரணடைந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, “ஆத்திரத்தில் கொலை செய்தேன், பிணை தாருங்கள்” என அழுத நடராஜ். இருவரும் காவலில் அடைக்கப்பட்டனர். பொலிஸ் விசாரணையில், சூட்கேஸ் வாங்கியதிலிருந்து உடலை அழித்த வரை, அனைத்தும் வெளிப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *