இலங்கை

திடீரென ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வந்த உயிராபத்து; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் போது, ​​

அதிக பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முப்படையினர், பொலிஸார் போன்ற பல்வேறு சீருடைகளை அணிந்திருப்பவர்கள் தொடர்பிலும், அதிக கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை  ஒரு சிறப்பு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து மூத்த பொலிஸ் அதிகாரிகள், பிரிவு அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தலைமை பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர் ஒருவர் இராணுவ மற்றும் பொலிஸ் சீருடை அணிந்து வந்து குற்றம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம் போன்ற பிற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பை முன்கூட்டியே அடையாளம் காண்பது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விசேட பிரமுகர்கள் பாதுகாப்புப் பணிகளுக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகளை

அடையாளம் கண்டு வேறுபடுத்துவதற்காக வெளியிடப்படும் வெவ்வேறு வண்ணக் கைப்பட்டிகள், பதாகைகள் அல்லது பிற சின்னங்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபிகள் கலந்து கொள்ளும் பண்டிகை நிகழ்வுகளில் பணியில் ஈடுபடும் முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் துணை சேவைகளின்  அதிகாரிகள் மீது மிகுந்த கவனம் செலுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *