யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்கவும்

யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை(19) யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளிடம் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதில் சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார்.
யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தெரிவித்தது.
இதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்றும், இந்த சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியும் சம்பந்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
![]()