முச்சந்தி

ஆஸ்திரேலியாவில் குழந்தை மற்றும் சிறுமி பலி – பெண்ணின் கொடூர செயல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில், மெல்போர்னில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை மற்றும் சிறுமி உயிரிழந்தமை தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை 26 வயது பெண் பார்த்துக்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

புகை மற்றும் சிறுவர்கள் அலறுவதைக் கண்டபோது அவசர பிரிவை அழைக்கவில்லை. ஐந்து வயது சிறுமி, மூன்று வயது சிறுவன் மற்றும் ஒரு வயது குழந்தை சம்பவத்தின் போது வீட்டில் இருந்தனர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு குழந்தை மற்றும் சிறுமி காயங்களால் உயிரிழந்தனர். அதே நேரத்தில் சிறுவன் உயிர் பிழைத்தார்.

தீ எப்படி ஆரம்பித்தது அல்லது அன்றிரவு அந்த சிறுமி தனியாக விட்டுச் சென்றது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அந்தப் பெண் குழந்தைகளை வீட்டில் விட்டுச் சென்ற இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு புகை எச்சரிக்கை ஒலித்ததாகவும், தீ விரைவாகப் பரவியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *