உலகம்

நேபாளத்தில் 13500 கைதிகள் தப்பியோட்டம்

அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 13,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் தலைமையகத்தைத் தவிர அனைத்து சிறைகளிலிருந்தும் பொலிஸார் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வன்முறைகள் காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 13,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், டில்லிபசார் சிறையில் ஏராளமான கைதிகளை விடுதலை செய்யக் கோரி வீரர்கள் தடுத்து வைத்திருப்பதைக் காட்டுகின்றன.

வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

சமூக ஊடகத் தடை மற்றும் அரசாங்க ஊழல் காரணமாக ஏற்பட்ட அமைதியின்மையை சாதகமாகப் பயன்படுத்தி, கைதிகள் ஏழு சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *