உலகம்

இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்

தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க அரசாங்கம் கூறியுள்ளது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு, தெலுங்கானாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்காளத்தின் மேற்கு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பயங்கரவாத தாக்குதல் அபாயம் இருப்பதால் மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளுக்கும், காஷ்மீருக்கும், மணிப்பூருக்கும் செல்வதை அமெரிக்கர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *