உலகம்

ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (07) அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது தளங்களை எல்லை தாண்டிய நடவடிக்கை குறிவைத்தது.

இந்திய மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் ஒவ்வொரு தளத்திலும் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முரிட்கேவில், இலக்காக இருந்த மஸ்ஜித் வா மர்காஸ் தைபா, எல்.இ.டி.யின் நரம்பு மையம் மற்றும் சித்தாந்த தலைமையகம், இது நீண்ட காலமாக பாகிஸ்தானின் “பயங்கரவாத நாற்றங்கால்” என்று கருதப்படுகிறது.

ஏனைய இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புலனாய்வு அமைப்புகள் இன்னும் சரிபார்த்து வருகின்றன.

ஆரம்ப மதிப்பீடுகளின்படி மொத்தம் 80 முதல் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வசதிகளில் JeM மற்றும் LeT ஆல் இயக்கப்படும் ஏவுதளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் தீவிரமயமாக்கல் மையங்கள் ஆகியவை அடங்கும்.

இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *