இலங்கை

யாழ்ப்பாணத்தில் அமைதியானமுறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3,519 வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.

மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *