பலதும் பத்தும்

தென் சீனக் கடலில் சீனா கைப்பற்றிய புதிய பகுதி!

பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய சாண்டி கே மணல் திட்டுப் பகுதியில் நான்கு அதிகாரிகள் கருப்பு நிற உடை அணிந்து சீனக் கொடியை ஏந்தியபடி நிற்பதைக் காட்டும் படங்களை சீன அரச ஒளிபரப்பு சேவையான CCTV வெளியிட்டது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் சீனா அந்தப் மணல் திட்டுப் பகுதி மீது “கடல்சார் கட்டுப்பாட்டையும் இறையாண்மை அதிகார வரம்பையும் செயல்படுத்தியதாக” CCTV கூறியது.

சீனாவும் பிலிப்பைன்ஸும் பல்வேறு தீவுகளுக்கு உரிமை கோரியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பின்னர் பிலிப்பைன்ஸ் மூன்று மணல் திட்டுகளில் இறங்கியதாகக் கூறியது.

பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினர் தரையிறங்கிய மணல் திட்டுகளில் ஒன்று சாண்டி கேயா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button