பலதும் பத்தும்

புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை என்ன..?

உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவ மதத்தில் உள்ள பல பிரிவுகளில் ஒன்று கத்தோலிக்கம். உலகெங்கும் உள்ள இந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் செயல்படுகிறார்.

இந்த கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மரணம் அடைந்த நிலையில், அவரது மரணத்திற்கு பிறகு கத்தோலிக்க திருச்சபையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து தேவசகாய மவுண்ட் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு தந்தை லியோன் டென்சன் கூறுகையில், “போப் ஆண்டவர் பிரான்சிஸ் மரணம் இந்த செய்தி உலகையே உலுக்குகிற செய்தியாக அமைந்துள்ளது.

காரணம் திருத்தந்தை அவர்கள் தம் பணியால், சிந்தனையால் மற்றும் வாழ்க்கை முறையால் ஒரு மாபெரும் அதிர்வை மானுட சமூகத்திற்கு வழங்கி உள்ளார். திரு அவையை பொறுத்தவரையில் நினைத்துப் பார்க்க முடியாத காரியங்களை அவர் செய்துள்ளார். அவர் திரு அவைக்கு புதிய பாதையை வகுத்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button