பலதும் பத்தும்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை பாம்பு இனம்..!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதிய இன பாம்பு இனத்தைக் கண்டுபிடிப்பதில் இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடரில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், உருவவியல் ரீதியாக விரி ஹால்டாண்டா உடன் மிகவும் ஒத்திருக்கும் இந்தப் புதிய இனத்திற்கு, நாட்டின் முன்னணி ஆராய்ச்சியாளரான தாசுன் அமரசிங்கவின் நினைவாக, தாசுன்ஸ் ப்ரோன்ஸ்பேக் என்றும், விலங்கியல் ரீதியாக டென்ட்ரெலாஃபிஸ் தாசுனி என்றும் ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மரகலை மலையிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒற்றை பெண் மாதிரியிலிருந்து இந்தப் புதிய இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் சமீரா சுரஞ்சன் கரனரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாம்பின் படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button