வேலைக்காக கணவரைக் கொன்ற மனைவி

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில், சென்ற மாதம் 4ஆம் திகதி தீபக்கின் சகோதரரான பியுஷை மொபைலில் அழைத்த ஷிவானி, தீபக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி உடற்கூறு ஆய்வு வெளியாக, பியுஷின் சந்தேகம் உறுதியாகியுள்ளது.
ஷிவானி தனது கணவரின் ரயில்வே வேலை தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
![]()