இலங்கை

உள்ளாட்சித் தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் தேர்தல் ஆணையர் எம்.எம்.எஸ்.கே. பண்டார மாபா தெரிவித்தார்.

இதேவேளை, மே மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, இந்த திகதி குறித்து விவாதித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவை எட்ட சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.

“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டுக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுக்கள் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *