இலங்கை

யாழில் இடம்பெற்ற ஐ.நாவின் விசேட நிகழ்வு; டக்ளஸ் பங்கேற்பு..!

ஐ.நாவின் அழைப்பின் பெயரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற விசேட நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 80 ஆவது ஆண்டு நிறைவும் இலங்கையில் குறித்த அமைப்பு கால்பதித்து 70 வருட நிறைவை கொண்டாடும் முகமாகவே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.

குறித்த அமைப்பு உலக நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், போன்ற நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான நோக்கங்களைக் மையமாக கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *