செய்திக்கான பயன்பாட்டில் Xக்கு முதலிடம்

இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம்,இந்தியாவின் அப்ஸ் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

பிரபல சமூக வலைத்தளமான ருவிற்ரர் நிறுவனத்தை 4.4 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 3.6 லட்சம் கோடி) எலான் மஸ்க், 2022-ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சொந்தமாக்கினார்.

ட்விட்டரை வாங்கியதுடன் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதுடன், நீலக் குருவி கொண்ட லோகோவை மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில், இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம், இந்தியாவின் அப்ஸ் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், இந்தியாவில் உள்ள அப்ஸ் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலியாக எக்ஸ் பயன்பாட்டில் உள்ளது என்றும், எக்ஸ் தளத்தில் ஒரு புதிய அம்சத்தைய வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

முன்னதாக, டாட்ஜ் டிசைனர் பயனர் ஒருவர் பிரெக்கிங் நீங்கள் இப்போது ரீவைண்ட் செய்யலாம் என்று எக்ஸ் தளத்தில் நேரடி வீடியோவை பதிவிட்ட நிலையில், எலான் மஸ்க் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *