நாளை சக்திவாய்ந்த நாக பஞ்சமி 2024; உங்கள் ராசியின் படி என்ன பரிகாரம் செய்யலாம்

ஓகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வருடம் நாக பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, விரதம் இருந்து நாகத்தை வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

அன்றைய நாளில் மஞ்சள், குங்குமம், பால் வெள்ளை நிற பூக்களுடன் நாக தெய்வத்திற்கு காணிக்கையாகப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு பால், நெய்யுடன் சர்க்கரை கலந்து படைக்கலாம். நாக தேவர் சன்னதியில் விளக்கேற்றி மனதார வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதோடு, நம் மனக்குறைகள் நீங்கும்.

இந்த நாக பஞ்சமி தினத்தில் 12 ராசியினர் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Oruvan

மேஷ ராசி

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படக்கூடிய மேஷ ராசி சேர்ந்தவர்கள் நாக பஞ்சமி அன்று பாம்பு உருவம் பதித்த செப்பு உலோகத் தகட்டை ஓடும் நீரில் விடவும். இதனால் ராகு தோஷம் பாதிப்பு குறையும்.

ரிஷப ராசி

சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி சேர்ந்தவர்கள் தங்களின் அனைத்து கவலைகளும், தடைகளும் விலக, நாக தேவதைகளை நினைத்து ஓடும் நீரில் தேங்காயை விடுவது நன்மை தரும்.

மிதுன ராசி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியை சேர்ந்தவர்கள் நாக பஞ்சமி தினத்தில், ஏழை எளியவர்களுக்கும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காய்கறி மற்றும் பழங்களை வழங்குவது நன்மை தரும்.

கடக ராசி

சந்திர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியை சேர்ந்தவர்கள் நாக பஞ்சமி அன்று தங்களின் சர்பதோசம், ராக தோஷம் பாதிப்பு குறைய, செப்பு தகட்டில் செய்யப்பட்ட சிறு பாம்பு உருவத்தை ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

சிம்ம ராசி

சூரிய பகவானால் ஆளப்படக்கூடிய சிம்ம ராசியை சேர்ந்தவர்கள், இந்த நாக பஞ்சமி நாளில் கணபதி வழிபாடு செய்வது நன்மை தரும். விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை செய்யவும். துர்க்கை அம்மனுக்கு லட்டு அர்ச்சனை செய்து விநியோகிக்கவும்.

கன்னி ராசி

புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசியை சேர்ந்தவர்கள், ராகு மற்றும் கேதுவின் தோஷ நிவர்த்திக்காக இந்த நாக பஞ்சமி நாளில், நாகர் சிலைக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

துலாம் ராசி

சுக்கிர பகவான் ஆளக்கூடிய துலாம் ராசியை சேர்ந்தவர்கள், இந்த நாக பஞ்சமி நாளில் ராகு – கேது தோஷ நிவர்த்திக்காக வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு உணவாக தூவி விடவும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் இந்த நாக பஞ்சமி நாளில் எட்டு விதமான உலோகங்களால் செய்யப்பட்ட வளையல்கள் அணிவது நல்லது.​

தனுசு ராசி

குரு பகவான் ஆளக்கூடிய தனுசு ராசியினர், இந்த நாக பஞ்சமி நாளில் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும்.

மகர ராசி

சனி பகவான் ஆளும் மகர ராசியை சேர்ந்தவர்கள், இந்த நாக பஞ்சமி அற்புத நாளில் 11 தேங்காய்களை வாங்கி நாக வழிபாடு செய்து ஓடும் நீரில் விடுவது நன்மை தரும்.

கும்ப ராசி

சனி பகவான் ஆளும் மற்றொரு ராசி கும்பம். இந்த ராசியை சேர்ந்தவர்கள், 500 கிராம் நிலக்கரியை ஓடும் நீரில் விடுவது நன்மை தரும்.

முடிந்தால் ஒரு துண்டு நிலக்கரியையாவது விடவும். இதனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ஏழரை சனியின் தக்கம் குறையும்.

மீன ராசி

குரு பகவான் ஆளும் மற்றொரு ராசி மீன ராசி. இந்த ராசியினர் நாக பஞ்சமி நாளில் தேங்காயைத் துருவி, அதை வறுத்த கோதுமை மாவு, சர்க்கரை, சிறிது உலர் பழங்களைப் போட்டு பக்தர்களுக்கு கொடுக்கவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button