மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஒரு நற்செய்தி; வேட்பாளர் யார்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

”ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ளும் வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம் என்பதே மக்களுக்கு கூறவேண்டிய நற்செய்தி.

உரிய நேரம் வரும் போது எமது வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம். மிகவும் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை நாம் முன்னிறுத்த உள்ளோம். ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

ஏனையவர்களின் ஒத்துழைப்புடனையே வேட்பாளரை நிறுத்துவோம். நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது வேட்பாளர் ஒருவரையே நிறுத்தினோம். தேர்தலின் பின்னர் எமது அரசாங்கமே அமையும்.” என்றும் அவர் இன்று கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button