எஸ்.பி.பி நினைவிடத்தில் கண்ணீருடன் இலங்கை இந்திரஜித்!; நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சரிகமப
மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்திற்கு சென்று இலங்கை இந்திரஜித் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் புகழ் பெற்ற பாடகராக திகழ்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அவருடைய பாடல்களை மட்டும் கேட்டு பாடகரான இந்திரஜித் குரு எஸ்.பி.பியின் நினைவிடத்திற்கு சென்று ஆசி வாங்க வேண்டும் என்று சரிகமப மேடையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெடிகேஷன் ரவுண்டில் அவரின் ஆசையை ஜீ தமிழ் நிறை வேற்றியுள்ளது.
குருவின் ஆசிர்வாதத்துடன் இந்திரஜித் இனி களம் காண போகின்றார்.



![]()