இலங்கை

மேதின ஊர்வலத்திற்கு 1000 இளைஞர்களை அழைத்து வரத் திட்டம்?

மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதின ஊர்வலத்தில் பங்கு பற்றுவதற்காக, இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு  அழைத்து வர அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து புத்திக பத்திரண தெரிவித்துள்ளதாவது ”   மே முதலாம் திகதி கொழும்பிற்கு ஆயிரம் இளைஞர்களை

அழைத்துவர அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதனை முன்னெடுப்பது யார் ? அரசாங்கத்திலுள்ள எந்த கட்சி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இளைஞர் படையணியில்  இருந்தே ஆயிரம் இளைஞர்களை கொழும்பிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தொழிற்ச்சங்கள் என்றால் எமக்கு பிரச்சனை அல்ல ஆனால் அரசாங்கம் இளைஞர் படையணியில்  இருந்தே இளைஞர்களை கொண்டு வர எத்தணிக்கின்றது.

இதற்கான செலவுகளை பெறுப்பேற்பது யார் அரசாங்கத்திலுள்ள எந்த அரசியல் கட்சி இந்த நடவடிக்கை எடுத்தள்ளது.

இன்று மாலைக்குள் அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்கவேண்டும் ” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.