உலகம்

இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இரு நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தலைமையிலான குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அஹமட் வஹிதியும் உள்ளதாக தெஹ்ரானில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி அவரை சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் ‘வாஹிதி’க்கு கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல், அர்ஜென்டினாவின் வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் அவரைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது

மேலும் ஈரானின் முன்னாள் மூத்த உறுப்பினரான வஹிதி 1994 ஆம் ஆண்டு AMIA மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று அர்ஜென்டினா மேலும் குறிப்பிட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.