கவிதைகள்

இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா ! [ துர்க்கையம்மன் துதி ]ஜெயராமசர்மா

இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா !

[ துர்க்கையம்மன் துதி ]

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா

ஈரமுடை நெஞ்சை ஈந்திடுவாய் தாயே
இணையில்லா திருவடியைப் பற்றுகிறோம் தாயே
கோரமுடை நினைப்பைக் கொன்றொழிப்பாய் தாயே
குவலயதில் வாழத் துணைநீயே தாயே

ஆணவமாம் நினைப்பை அகற்றிவிடு தாயே
அகந்தை அகமேறா ஆக்கிவிடு தாயே
தீமையெமை அணுகா திருப்பிவிடு தாயே
திக்கெட்டும் நிறைந்தாய் துர்க்கையம்மா நீயே

சோர்வடையும் எண்ணம் துடைத்தெறிவாய் தாயே
தொலைநோக்குப் பார்வை கொடுத்தருள்வாய் தாயே
வாய்மையுடன் வாழ வரமருள்வாய் தாயே
மாநிலத்தில் எமக்குத் துணைநீயே தாயே

அச்சமதை அகற்ற அருகணைவாய் அம்மா
ஐயநிலை போக்க அருள்புரிவாய் அம்மா
இச்சைகொண்டு உன்னை இறைஞ்சுகிறோம் அம்மா
இவ்வுலகில் எம்மைக் காத்திடுவாய் அம்மா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *