கவிதைகள்

அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா ! [ நாளை இலக்குமி பூஜை ஆரம்பம் )ஜெயராமசர்மா

அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா !

[ இலக்குமிக்குத் துதி ]

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா

பாருலகில் வாழப் படைத்துவிட்டாய் தாயே
வாழ்வு வளமாகத் தனம்வேண்டுந் தாயே
தினம் போற்றுமெம்மை திகப்படையா வண்ணம்
அனுதினமும் எமக்கு அருள்புரிவாய் தாயே

பொருளில்லா உலகில் பொழுது விடியாதே
பொருளின்றி எதுவும் எமையணுக மாட்டா
அருளோடும் பொருளும் உன்னிடத்தே உண்டு
அருளோடு பொருளை அளித்திடுவாய் அம்மா

நோயின்றி வாழ நூல்கள்பல கற்க
வாய்மையுட னிருக்க வறுமையது போக
ஆதார மனைத்தும் உன்கருணை அம்மா
அருள்சுரந்து எம்மை அரவணைப்பாய் அம்மா

தானதர்மம் செய்ய பெருமாசை தாயே
தனமட்டும் எமக்குத் தங்குதில்லை தாயே
ஆனமட்டும் நாமும் உழைக்கின்றோம் அம்மா
ஆனாலும் தனமோ அணுகவில்லை அம்மா

நீமனது வைத்தால் நிறைந்துவிடும் அம்மா
நினைப் பெல்லாம் நீயாயிருக்கிறாய் அம்மா
வாழ்நாளில் நாமும் வறுமையின்றி வாழ
வரமருள்வாய் இலக்குமித்தாயேநீ எமக்கு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *