கதைகள்
குரங்காயிடுவோமா?….. ( குட்டிக்கதை ) … சங்கர சுப்பிரமணியன்.

செய்திகேட்டு திடுக்கேட்ட செந்தில்நாதன் கால்சட்டையின் பின்பக்கம் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அதைப்பார்த்த பரந்தாமன்,
“என்னப்பா செந்தில், நல்ல கால்சட்டைகளின் பின்புறமெல்லாம் ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்?”
“பரந்தா, உனக்கு செய்திதெரியாதா? கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால் குரங்கு ஆகிவிடுவோமாம். அதுக்குத்தான் முன்னேற்பாடு.”
அதைக் கேட்ட பரந்தாமன் அட போப்பா, இப்பவாவது நம்புவீங்களா மனுசன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதை. அதையும் இன்னொரு நாட்டுக்காரன்தான் நமக்கு சொல்லணும் என்றார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()