கதைகள்
மாதவியா? காஞ்சனாவா?… ( குறும் கதை ) ….. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)
பாலன் இலங்கையில் இருக்கின்றான்.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் தந்தையுடன் கதைக்கும்போது,
“உனக்குக் கோவலன் கண்ணகி காஞ்சனா கதை தெரியும் தானே!” என்றார் அப்பா.
`அப்பாவுக்கு மாறாட்டம் பிடித்துவிட்டதா?’ யோசித்தான் பாலன். காஞ்சனா அப்பாவின் தங்கை பெண். அவுஸ்திரேலியாவில் அப்பாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்றாள்.
“என்ன அப்பா சொல்கின்றீர்கள்? கோவலன் கண்ணகி மாதவி அல்லவா?”
“அடப் போடா…. உனக்கு இப்பவே மாறாட்டம்.”
`ஏதோ உள் குத்து இதில் இருக்கவேண்டும்’ நினைத்தான் பாலன்.
![]()