கதைகள்

அப்புறம்?… . ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

அப்புறம்?…

முகநூலை மேய்ந்து கொண்டிருந்தேன். பல்கலைக்கழகத்தில் எனக்கு அடுத்த வகுப்பில் படித்த சிவராசனின் பதிவு ஒன்றை, என் நண்பன் பகிர்ந்திருந்தான். பேராசிரியர் ஒருவரால் சிவராசனுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ் அது. ஒரு நாசா விஞ்ஞானியைப் புகழ்வதுபோல். சிவராசன் பல்கலைக்கழகத்தில் கொடி கட்டிப் பறந்தவன்.

“சிவராசன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றான்?” நண்பனிடம் விசாரித்தேன்.

“மச்சான்…. சிவராசன் கனடாவுக்குப் போனவன். அங்கை அவனுக்கு வாய்ப்புக்கள் சரிவர அமையவில்லை. இப்ப மெண்டலாகிப் போனான்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button