இலங்கை

18 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெனீவாவில் மீண்டும் உரையாற்றிய இலங்கை அரசியல் தரப்பு

18 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று மீண்டும் உரையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் கூட்டமைப்பை (IPPF) பிரதிநிதித்துவப்படுத்தி, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கக் குழுக்களுடன் இணைந்து ஜெனீவா பேரவையில் கலந்துகொண்டிருந்தமை தொடர்பான நினைவுகளையும், தற்போதைய பேரவைக் கூட்டத்தொடரில் ஜெனீவாவில் செயற்பட்டு வரும் ரோஷன் மற்றும் பிரையன் ஆகியோருடன் கலந்துகொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

imageஇம்முறை மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்தப்பட்ட உரை, இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் ஜனநாயக நிலைமைகளை மையமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்டோர் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் கட்டாயத் தடுத்து வைப்புகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அழுத்தங்களினால் நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்படும் தடைகள் குறித்தும் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களின் சுகாதார உரிமைகள் தொடர்பில் உரையாற்றியிருந்த நிலையில், தற்போது நாட்டின் பிரச்சினைகள் மாறியிருந்தாலும், தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட தாம் நீண்டகாலமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் தாராளமய ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் குறித்த அரசியல் தரப்பு வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *