இலங்கை

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இரு முகத்தைக் காட்டும் அரசு; இந்தியாவுக்குத் துணையாகவும் இல்லை

வடக்கு, கிழக்கிலே பெருமளவு முதலீடுகளைச் செய்ய இந்தியா முன்வந்த போதும் இந்த அரசாங்கம் அதற்குத் துணையாக இல்லை, அவர்கள் இரண்டு முகத்தைக் காட்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் சீனாவிற்கு ஒரு முகத்தையும், இந்தியாவுக்கு ஒரு முகத்தையும் காட்டி, மாறாக எங்களுடைய தமிழர்களை தொடர்ச்சியாக நசுக்கிக் கொண்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – வல்லிபுனம் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி செஞ்சோலை வளாகத்தின் மீது இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பில் மிக உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாணவர்களை விடுதலைப் புலிகள் அல்லது அவங்களுடைய பாஷையிலே சொல்லப் போனால் அவர்கள் பயங்கரவாதிகள் என்ற விடயத்தை இந்த சர்வதேச அரங்குக்கு அரங்கேற்றுவதற்காக அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சு, இலங்கையினுடைய வெளியுறவுத்துறை அமைச்சு மிக பொய்யான கதைகளைக் கட்டி விடயங்களை வெளியே கொண்டுவர முயன்றார்கள்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் அன்றைய அந்தத் தொண்டு நிறுவனங்கள் அங்கே இருந்தது. அந்த தொண்டு நிறுவனங்கள், இல்லை, இந்த மாணவச் செல்வங்கள் இவர்கள் வெறும் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்திருந்தவர்கள், இவர்கள் மீது வீணாகக் குண்டடிக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் அந்தத் தொண்டு நிறுவனங்கள் வெளியே கொண்டு வந்ததால் தான் அந்த உண்மை சர்வதேசத்திற்குத் தெரியவந்தது.

இவ்வாறு எமது மண்ணிலே பல படுகொலைகள் நடந்து ஏறியிருக்கின்றது. கடந்த 77 வருடங்களாக எங்களுடைய இனம் படுமோசமாக இனவெறியாட்டத்திற்கு உட்பட்டு, சிங்கள பேரினவாத பூதம் தொடர்ந்தும் வந்தே இந்த இலங்கைத் தீவை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள். 1956ஆம் ஆண்டு எங்களுடைய தலைவர்கள், தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றார்.

 

Loading

One Comment

  1. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அரசுஎ இருமுகத்தைக் காட்;டுவதில் தப்பெதும் இல்லை..இலங்:னை எந்தவொரு நாட்டின் பக்கமும் பக்கச் சார்பாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. .அணிசேராக் கொள்கையுடன் தனது நாட்டுக்குத் தேவையான உதவிகளை இருநாட்டிடமுமிருந்து தேவைப்படுமாயின் பெறலாம்.

    இரு நாடுகளுமே இலங்கையின் விவகாரத்தில் தலையிடாமலிருக்க வேண்டும்.இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாடுகளுக்கும் தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் இந்தியாவே முழுக்காரணமாகும்.

    இந்தியா போராளிக்குழுக்களுக்;கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஆயதத்தின் மூலமே தமிழருக்கான உரிமையைப் பெற்றுக் கொளளலாம் என மூளைச்சலவை செய்து பல போரளிக்குழுக்களை உருவாக்கிப் பிறகு விடுதலைப்புலிகள் மூலம் ஒவ்வொரு போராளிக் குழுக்களையும் நிர்மூலமாக்கி இறுதியில் இலங்கை அரசுக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி சிங்கள மக்களை தமிழர்கள் மீது அதிருப்தி னெகாள்ள வைத்து தனது காய் நகர்த்தலை நடத்தியது இந்தியாவேதான்

    இந்தியா சாணக்கிய தேசம் சூழ்ச்சி செய்வதிலும் சதி செய்வதிலும் அவர்கள் பெரும் விற்பன்னர்கள்.எந்த நாட்டையம் நம்பலாம் இந்தியாவை நம்பவே கூடாது.இப்பொழுது அவர்களின் றோ உளவு அமைப்பு தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்தி அநுர அரசுக்கு நெருக்கடி கொடுக்க இறங்கியுள்ளது.

    தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் இது தெரியாமலா அரசüpயல்வாதியாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *