உலகம்

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படைக்கு நெருக்கடி..!

ஈரானுக்கு எதிரான போரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் USS Abraham Lincoln விமானந்தாங்கிக் கப்பலில் அமெரிக்க வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை தொடர்பாக கவலைகள் எழுந்துள்ளன.

260 நாட்களுக்கும் மேலாக கடலில் இருக்கும் இந்தக் கப்பலில் சில வீரர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், மனஉறுதி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை
உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையில், USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், Lincoln கப்பல் தொடர்பான மோசமான நிலை குறித்த தகவல்கள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” என மறுத்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை தொடரும் நிலையில், நீண்டகால போர் மற்றும் வீரர்களின் மனநிலை அமெரிக்காவுக்கு புதிய சவாலாக உருவாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button